தேவையானவை:
செம்பருத்தி பூ - 20
சர்க்கரை - ஒரு கிலோ
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரை லிட்டர்.
செய்முறை:
• செம்பருத்தி பூவை தண்ணீரில் காய்ச்சி வடி கட்டவும்.
• அதில் சர்க்கரையை சேர்த்து ஒரு கம்பி பாகு பதத்தில் காய்ச்சி இறக்கவும்.
• ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து சுத்தமான பாட்டில்களில் ஊற்றி உபயோகிக்கவும்.
• ஒரு டம்ளர் செம்பருத்தி சாறுக்கு நான்கு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பரிமாறவும்.